பிரம்மஸ்ரீ பரமசாமி ஐயர்.
எங்கள் அருமை மணிமாமாவுக்கு கண்ணீர் அஞ்ஜலி. அனலைதீவினைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை நாகவத்தையில் நெடுங்காலமும், பின்னர் கல்முனை பாண்டிருப்பிலும் வாழ்ந்து வந்த எமது மாமா பிரம்மஶ்ரீ: ந. பரமசாமி ஐயர்(மணிஐயா) அவர்கள் இன்று காலை புளியந்தீவு நாகேஸ்வரன் திருவடியில் அமைதி கொண்டார். அமரர்: ஶ்ரீமதி கிருஷ்ணவேணி அம்மாவின் துணைவரும், பண்டாரவளை மணிஅண்ணா, மணிமாமா எனவும் உறவுகளால் அழைக்கப்பெற்றவரும், புளியந்தீவு நாகேஸ்வரன் கோவில், பண்டாரவளை நாகவத்தை சுப்ரமணியசுவாமி கோவில், கல்முனை மாமாங்கப் பிள்ளையார் கோவில் என்பவற்றில் நீண்டகாலம் அரும் பணியாற்றிய […]