தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காயை வைப்போம். ஏன் மற்ற எந்தக் காயையும் வைப்பதில்லை? முன்னோர்கள் காரணத்தோடுதான் எதையும் சொல்லி வைத்துள்ளார்கள்!!! மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைப்பதை திரைப்படத்திலும் பார்த்திருக்கிறோம். தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத் தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம். தலைப்பகுதியாக தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே நாம் தரும் விளக்கம், மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் என்ன என்று எண்ணுகிறீர்கள். தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன. […]
ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்.
அஞ்சலி சிவஸ்ரீ பிரேமச்சந்திரக் குருக்கள்.
கண்ணீர் அஞ்சலி: சிவஸ்ரீ அ.பிறேமச்சந்திரக்குருக்கள் அவர்கள் இன்று முன்னிரவு இறைபதமடைந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைய தினம் ( செவ்வாய் – 18 /04 / 2023 ) கோப்பாய் வதிவிடத்தில் இடம்பெற்று தகனத்திற்காக துன்னாலை தியான்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று அன்னாரின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனை பிரார்த்திக்கிறோம். Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள், […]
அட்சதை என்றால் என்ன?
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூஜைகள்,ஆலயங்கள் , திருமணம், உபநயனம் போன்ற நல்ல பல தருணங்களிலும் பெரியவர்கள் வாழ்த்தும் போது அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்வது நீங்கள் அறிந்தது! அப்படி நாம் பயன்படுத்துகின்ற மங்கல “அட்சதை”யைப் பற்றியும், அதன் மகத்துவங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அட்சதைக்கு? இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறது? இதன் “தாத்பர்யம்” (அர்த்தம்) என்ன? என்பதையெல்லாம் சற்று புரிந்து கொள்ள […]
காயத்திரி மந்திரங்கள்! அதன் மகிமை!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ”காயத்ரி மந்திரம்” காயத்ரி மந்திரத்துக்கு இணையான மந்திரம் உலகில் கிடையாது. இந்த மந்திரம், விசுவாமித்திர முனிவரால் அருளப்பட்டது. `காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் வந்தது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி, சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை நேரத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. […]
சிராத்தம் சம்பந்தமானது! தகவல்.
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கலாம், தெளிவோமே !!! சகோதரர்கள் ஒன்றாக இணைந்து வசிக்கும் பட்சத்தில் ஒன்றாகவே சிராத்தம் செய்யலாம். வெவ்வேறு ஊர்களில் தனித்தனியே வசிப்பவர்கள் என்றால் தனித்தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். பாகம் பிரிந்துவிட்டாலே சிராத்தமும் தனிதான் என்பதை சாஸ்திரம் உறுதியாகச் சொல்கிறது. பாகம் என்றால் சொத்தில் பாகப்பிரிவினை என்று பொருள்காணக் கூடாது. பாகம் என்றால் சமையல் என்று பொருள். நல்ல ருசியாக சமைப்பதை நளபாகம் என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆக இங்கே […]
தேங்காய் வைத்து கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம்.
பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் அடிக்கடி தோன்றும். அந்த வகையில கும்பம் வைக்கும்போது ஏன் தேங்காயை கும்பத்தின் மீது வைக்கிறோம்? வேறு காய்களோ ,பழங்களோ ஏன் வைப்பதில்லை என்பதன் விளக்கத்தை தருமாறு அன்பர் ஒருவர் கேட்டுள்ளார். ஆன்மீகப் பெரியவர்கள் இதுக்கு சொன்ன விளக்கத்தை பார்ப்போம்!!! முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்துகொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக […]
இறைவனுக்கு எப்படி நன்றி கூற வேண்டும்?
எங்களை இப்படி நல்லபடியாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு எப்படி நன்றி கூறவேண்டும்? தடுக்கி விழப் போன எங்களை யாரும் கை கொடுக்க எத்தனித்தால் உடனே நன்றி என்கிறோம். இறைவனுக்கு??? நிவேதனம், பிரசாதம் என்பதெல்லாம் என்ன? நமக்காக நன்மைதரும் வேலையை ஒருவர் செய்தாரென்றால் அதற்காக மகிழ்ந்து நாம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்; அல்லது ஏதேனும் அன்பளிப்பை அவருக்கு அளித்து நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். ஏன், வீட்டிலேயே சின்னப் பையன்களுக்கு அவர்கள் ஏதாவது வீட்டுவேலையை சிறப்பாகச் செய்தார்களென்றால், சாக்லெட், […]
புது வீட்டுக்கு ஏன் பால் காய்ச்சுகிறோம்?
புது வீட்டுக்கு போகிறோம், பால் காய்ச்சுகிறோம் என்று சொல்வோம். இந்த பால் காய்ச்சும் வைபவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இளைய சமுதாயத்தினர் இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்! கடவுளை வழிபடுவோர் நிச்சயம் இதை புரிந்து கொள்வார்கள் நண்பர்களே!!! ‘க்ஷீரே சுக்ராய நம:’ என்கிறது வேத மந்திரம். க்ஷீரம் என்ற வார்த்தைக்கு பால் என்று பொருள். பசும்பாலினில் சுக்கிரனின் அம்சம் நிறைந்துள்ளது என்பது இந்த வாக்கியத்தின் அர்த்தம். ஆனந்த வாழ்வினையும், குறைவில்லாத பொருட்செல்வத்தினையும் தருகின்ற கிரஹம் சுக்கிரன். ஜோதிடவியல் […]
எப்படி அர்ச்சனை செய்கிறோம்?
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஏதேனும் ஒரு கோரிக்கையை வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள் தங்களது கோத்திரம், நட்சத்திரம், ராசி மற்றும் பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்வர். அதாவது, தங்களுக்குத் தேவையானவற்றை பெற வேண்டி பெயர், விலாசம் எழுதி அரசாங்கத்திடம் மனு எழுதி சமர்ப்பிக்கிறோம் அல்லவா, அது போல அர்ச்சகர் மூலமாக இறைவனிடம் தனக்குத் தேவையானவற்றைப் பெற வேண்டி அர்ச்சனை செய்வதன் மூலமாக மனுவினை சமர்ப்பணம் செய்வர். எனக்கு என்ன தேவையோ அதனை இறைவன் அறிவான், […]