கட்டுரை

தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்? அதன் பலன்கள் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்? அதன் பலன்கள் என்ன? ​தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கல சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்து கொண்டிருக்கும். ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் அறியாமையையும், அஞ்ஞானத்தையும் குறிக்கிறது. இறைவனை எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும், ஒளிமயமானவனாகவும் கருதுகிறார்கள். நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் […]

இணையதளம். www.modernhinduculture.com

மதிப்பு வாய்ந்த நண்பர்களே , அன்பர்களே வணக்கம்!!! எங்களின் www.modernhinduculture.com என்ற இணையதளத்தில் பகிரப்பட்ட ஆன்மீக விடயங்கள் சுமார் 400 கட்டுரைகள் அடங்கிய ஓர் தொகுப்பு நூல் அண்மையில் Modern Hindu Culture நிறுவனர் டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர் தம்பதிகளின் சதாபிஷேக நிகழ்வின் போது வெளியிடப் பட்டு பலரின் கைகளில் அந்த தொகுப்பு நூல் சென்றடைந்தமை நாம் அறிந்தது!!! மகிழ்ச்சி!!! இப்போது மேலும் பல ஆன்மீக தகவல்கள் www.modernhinduculture.com இணையதளத்தில் பகிரப… See more

இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன?

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். July 20  ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே ! இறைவனுக்கு சோடசோபசாரம் செய்வது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன? மஹோத்சவம் மற்றும் பிரதான வழிபாட்டு நேரங்களில் இந்த சோடோபசார வழிபாடு மிக மிக முக்கியத்தும் பெறுகிறது!!! உபசாரம் என்பது இறைவனது வழிபாட்டில் சிறப்பு மிக்கதோர் அம்சமாகும். இறைவனை அரசனாக நினைத்து நாம் செய்யும் பணிவிடைகள். இதனை ஐந்து, பத்து, பதினாறு, அறுபத்துநான்கு என விவரிக்கலாம். இவற்றுள் சோடசோபசாரம் […]

விநாயகப் பெருமானின் திருவுருவ விளக்கம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! முழுமுதல் கடவுள், விக்கினங்களைத் தீர்ப்பவர் , அந்தப் பெருமானின் திருவுருவ  விளக்கங்களை அறிவோம்!!! திருவுருவ விளக்கம் : திருவடி : ஆன்மாவைப் பொருந்தி நின்று மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன. பெருவயிறு : ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது. ஐந்துகரங்கள் : பிள்ளையாரின் […]

சிவபெருமானின் 5 முகங்கள் :

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிவபெருமானின் 5 முகங்கள் : ஈசான முகம் தத்புருஷ முகம் அகோர முகம் வாமதேவ முகம் சத்யோஜாத முகம் ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின. அவையாவன : ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் : சோமாஸ்கந்தர் நடராசர் ரிஷபாரூடர் கல்யாணசுந்தரர் சந்திரசேகரர் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் : பிட்சாடனர் காமாரி காலாரி சலந்தராரி திரிபுராரி அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள் : கஜசம்ஹாரர் வீரபத்திரர் தக்ஷிணாமூர்த்தி […]

பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவர் வழிபாட்டின் முக்கியத்துவம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிரதோஷ வழிபாட்டில் நந்தி தேவர் வழிபாட்டின் முக்கியத்துவம்!!! முதல் வழிபாடு நந்திதேவருக்கு ஏன்? வேதகோஷங்கள் ஒலிக்க சிவபெருமான் பார்வதி தேவியுடன் கைலாயத்தில் வீற்றிருந்தார். அப்பொழுது வீணையை மீட்டிக் கொண்டு வந்த நாரதர் சிவபெருமானை வணங்கி “பெருமானே, பூலோகத்தில் மக்கள் அறியாமையால் துன்புறுகின்றனர். அறியாமை இருளால் தங்கள் திரு நாமத்தைக் கூட ஓத மறந்திட்டனர். அவர்களது அறியாமையைத் தாங்கள் போக்க வேண்டும்” என வேண்டினார். உடன் நாரதரது கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், “தான் பூலோகம் […]

சனாதனம் என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! திடீரென்று எல்லோரும் சனாதன தர்மம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள் . நாம் அறிந்த விடயங்களை இங்கு பகிர்கிறோம்!!! சனாதன தர்மம் என்றால் என்ன? இந்த கேள்வியை நாம் பலமுறை எதிர் கொண்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கு இதற்கான சரியான விடை தெரியுமா என்பது சந்தேகமே. ஹிந்து மதமே சனாதன தர்மம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒரு வகையில் சரி என்றாலும், சனாதன தர்மம் என்பது மதத்தைத் தாண்டிய விஷயமாகும். சனாதனம் […]

கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காயை வைப்போம். ஏன்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காயை வைப்போம். ஏன் மற்ற எந்தக் காயையும் வைப்பதில்லை? முன்னோர்கள் காரணத்தோடுதான் எதையும் சொல்லி வைத்துள்ளார்கள்!!! மாம்பழத்தை ஞானப்பழம் என்று அழைப்பதை திரைப்படத்திலும் பார்த்திருக்கிறோம். தலைப்பகுதியைத் தாங்கிப்பிடிப்பதால் ஞானத்தைத் தரவல்ல மாவிலையை பயன்படுத்துகிறோம். தலைப்பகுதியாக தேங்காயை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதே நாம் தரும் விளக்கம், மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் என்ன என்று எண்ணுகிறீர்கள். தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன. […]

அஞ்சலி சிவஸ்ரீ பிரேமச்சந்திரக் குருக்கள்.

கண்ணீர் அஞ்சலி: சிவஸ்ரீ அ.பிறேமச்சந்திரக்குருக்கள் அவர்கள் இன்று முன்னிரவு இறைபதமடைந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைய தினம் ( செவ்வாய் – 18 /04 / 2023 ) கோப்பாய் வதிவிடத்தில் இடம்பெற்று தகனத்திற்காக துன்னாலை தியான்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று அன்னாரின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனை பிரார்த்திக்கிறோம். Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள், […]

Scroll to top