தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்? அதன் பலன்கள் என்ன?
தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்? அதன் பலன்கள் என்ன? தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கல சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்து கொண்டிருக்கும். ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் அறியாமையையும், அஞ்ஞானத்தையும் குறிக்கிறது. இறைவனை எல்லா ஞானத்திற்கும் மூலமானவனாகவும், ஒளிமயமானவனாகவும் கருதுகிறார்கள். நமது குடும்பங்களில் அறியாமை என்ற இருளகற்றி ஞானம் என்ற ஒளி பரவ வேண்டும் […]