கட்டுரை

ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா? ஐயனார் வழிபாடு என்பது மிகப் பழைய காலந்தொட்டே தமிழகத்திலும் இலங்கையிலும் விரவிக் காணப்படுகின்றது. ஊர்கள் தோறும் வயல் நிலங்களிலும் கடலோரத்திலும் மலை உச்சிகளிலும் ஐயனாருக்கு கோயில் எழுப்பி தமிழர்கள் பாரம்பரியமாக கிராம உணர்வுடன் இயற்கை வழிபாடாற்றியும் சிவாகம பூர்வமாகப் திருக்கோயில் எழுப்பி பிரதிஷ்டை செய்து வேதாகம நெறி சார்ந்தும் வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள். சாத்தா (சாஸ்தா) என்றும் அழைக்கப்பெறும் ஐயனார் கிராம தேவதையாகவும் வழிபடப்பட்டு வந்துள்ளார். […]

ரிஷப வாகனம் ஏன் ?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலய விழாக்களில் நீங்கள் பார்திருப்பீர்கள் ,எல்லாம் வல்ல எம்பிரானும் பிராட்டியாரும் ரிஷப வாகனத்தில் வலம் வருவதை , ஏன் அவர்கள் அந்த வாகனதில் வந்து அடியவர்களுக்கு காட்சி தருகிறார்கள்? காளை மாடு நிலம் உழுது நெற்பயிர் விளைய உழைக்கிறது. ஆனால் அந்த நெல்லிலிருந்து அரிசியை நாம் எடுத்துக் கொள்ள, அதன் வேண்டாத பகுதியான உமியையும் வைக்கோலையும், தான் உண்கிறது. உண்மையான உழைப்பும், தியாக உள்ளமும் ஒரு தாயைப் போல இந்தக் காளையும் மேற்கொண்டிருக்கிறது. […]

சடங்கு சம்பிரதாயங்களை கேலி பண்ணாதீர்கள்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நம்மில் பலர் தங்கள் மத அனுட்டானங்கள், குடும்ப வழமை, பெரியவர் முடிவுகள், போன்ற அடிப்படைகளில் பல சடங்குகளை செய்து வருகிறார்கள். நண்பர்களே, நீங்கள் இதை பின்பற்றுகிறீர்களோ இல்லையோ அது வேறு விடயம், ஆனால் இந்த சடங்குகளை பின்பற்றுபவர்களை கேலி பண்ணாதீர்கள். பிரதானமாக தமிழ் நாட்டில் சிலர் கேலி பண்ணுவது போல அடுத்த மாநிலங்களில் கேலி பண்ண முடியாது. ஒரு சடங்கை அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் பரவாயில்லை. அந்த மரபை அவர் அவரையும் […]

பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய / அர்சனை பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய / அர்சனை பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள் வெற்றிலைப் பாக்கு – தாம்பூலம் தேங்காய்: இரு தேங்காய் மூடிகள் – – நாரிகேல கண்ட த்வயம் பல தேங்காய் மூடிகள் – நாரிகேல கண்டாணீ முழுத்தேங்காய் – நாரிகேலம் மற்றவைகள் 1 நெய் – ஆஜ்யம் பால் – க்ஷீரம் சுக்கு வெல்லம் கலந்த நீர் – பானகம் வெண்ணெய் – நவநீதம் கல்கண்டு – ரஸ கண்டாளீ ஊதுபத்தி […]

தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! வேதங்கள், மந்திரங்களின் மகத்துவதை அறிவோம்! தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது. ஆலயத்தில் கல்லுக்குள் இருக்கிறது. வானத்தில் சூரியனாக சுடர் விடுகிறது. இடியாக கர்ஜிக்கிறது. மழையாகி கருணையைப் பொழிகிறது. அக்னியாக ஜொலிக்கிறது. மலையும் மண்ணுமாகி எல்லோரையும் தாங்குகிறது. கடலென விரிந்திருக்கிறது. விண்மீன்களுக்குள் மின்னுகிறது. காற்றாக சுழன்று எல்லோரையும் அணைக்கிறது. மரம் செடி கொடியாகி ஜீவன்களை காக்கிறது. இப்படி தெய்வம் எல்லாமுமாக இருப்பதை கூறிய ஞானியர், அது ஒலியாகவும் இருப்பதை கண்டனர். அதோடு நில்லாது அதை […]

அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பலருக்கும் சில சமயத்தில் சில பல சந்தேகங்கள் ஏற் படும் , அது சரியா ? இது சரியா? அல்லது பிழையா? என்று. குழப்பமே வேண்டாம். நண்பர் ஒருவரின் சந்தேகத்துக்கு எங்களின் பதில் இப்படியாக அமைகிறது. அக்கா தங்கைகளை ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கலாமா ? இது சரியா? பிழையா? இதுதான் நண்பர் அனுப்பிய சந்தேகம். இது சாஸ்திரத்திற்கு விரோதமானது அல்ல என்பதால் இதனை மறுக்க வேண்டிய அவசியமில்லை. […]

ஏன் சிதறு தேங்காய் உடைக்கிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே: ஏன் சிதறு தேங்காய் உடைக்கிறோம்? விக்நேஸ்வரர், தம் அப்பாவான ஈஸ்வரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்கு பிடிக்கும். அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்று […]

மகாளய பட்ஷம் , எங்களை சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முன்னோர்களை நன்றியுடன் நினைவு கூரும் மிக உன்னத நேரமிது.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மகாளய பட்ஷம் , எங்களை சிறப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முன்னோர்களை நன்றியுடன் நினைவு கூரும் மிக உன்னத நேரமிது. ஆவணி மாத அமாவாசையில், உங்களின் முன்னோரை நினைத்து அவர்களுக்கு பூஜை செய்யுங்கள். நான்குபேருக்கேனும் தயிர்சாதம் பொட்டலம் வழங்குங்களேன். உங்களையும் உங்கள் சந்ததியையும் முன்னோர்கள் இனிதே வாழ ஆசீர்வதிப்பார்கள். பித்ருக்களின் அருளாலும் ஆசியாலும் கடாட்ஷமாக வாழ்வீர்கள். வடை பாயாசம் என்று எங்களால் பெரிதாக செய்ய முடியவில்லை என்றாலும் எங்களால் முடிந்த அளவு […]

மகாளய அமாவாசை உட்பட மகாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து……….

somas Sharma மகாளய அமாவாசை உட்பட மகாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து நமது வீட்டிற்கோ அல்லது அவர்கள் இஷ்டப்படும் இடத்திற்கோ சென்று வர அனுமதி உண்டு. இந்த 15 நாட்களும் நம்மை காண வரும் முன்னோர்களுக்கு நாம் திதி தர்ப்பணம் அளிக்கலாம். நம்மால் இயன்ற தான தர்மம் செய்ய வேண்டும். எந்த நாட்களில் திதி கொடுத்தால் என்ன புண்ணியம் என்று பார்க்கலாம். முதல்நாள் – பிரதமை […]

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புரு‌ஷத்தில்……………………………………..

Somas Sharma சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புரு‌ஷத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். காவல் தெய்வமாக கருதப்படும் இவரும், ஈசனின் முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்து வருகிறார். அனைத்து சிவாலயங்களிலும் வடகிழக்கு திசையில் இவருக்கு தனியாக சன்னிதி இருக்கும். திரிசூலத்தை கையில் ஏந்திய படியும், நாய் வாகனத்துடனும் காணப்படுபவர் இவர். பைரவர் என்பதற்கு பயத்தை நீக்குபவர், பக்தர்களின் பாவத்தைப் போக்குபவர் என்று பொருள். பைரவர் அவதாரம் சிவனுக்கு இருக்கும் ஐந்து தலைகளைப் போன்றே, […]

Scroll to top