மகாளய அமாவாசை உட்பட மகாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து நமது வீட்டிற்கோ அல்லது அவர்கள் இஷ்டப்படும் இடத்திற்கோ சென்று வர அனுமதி உண்டு.
இந்த 15 நாட்களும் நம்மை காண வரும் முன்னோர்களுக்கு நாம் திதி தர்ப்பணம் அளிக்கலாம். நம்மால் இயன்ற தான தர்மம் செய்ய வேண்டும்.
எந்த நாட்களில் திதி கொடுத்தால் என்ன புண்ணியம் என்று பார்க்கலாம்.
முதல்நாள் – பிரதமை – பணம் சேரும்
இரண்டாம் நாள் – துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
மூன்றாம் நாள் – திரிதியை – நினைத்தது நிறைவேறுதல்
நான்காம் நாள் – சதுர்த்தி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
ஐந்தாம் நாள் – பஞ்சமி – செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்கலாம்.
ஆறாம் நாள் – சஷ்டி – புகழ் கிடைத்தல்
ஏழாம் நாள் – சப்தமி – சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
எட்டாம் நாள் – அஷ்டமி – சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
ஒன்பதாம் நாள் நவமி – திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
பத்தாம் நாள் – தசமி – நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
பதினொன்றாம் நாள் – ஏகாதசி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
பன்னிரெண்டாம் நாள் – துவாதசி – தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
பதின்மூன்றாம் நாள் – திரயோதசி – பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
பதினான்காம் நாள் – சதுர்த்தசி – ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
பதினைன்தாம் நாள் – மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
![](https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/118851021_10157365141201161_845350555155387703_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=PiEqu-fWTggAX98Qwcq&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=ce0cb1008715976e78f05cf783a2f93c&oe=5F783A08)
![](https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/118808010_10157365141211161_917717335265275876_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=iutpMoBPYq4AX9Rdp2j&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=0c5ab97e0787205a298c08799bfe749f&oe=5F79DB07)
மகாளய அமாவாசை உட்பட மகாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து……….