Author : Dr. N. Somash Kurukkal

சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!! ஆலய உத்சவங்கள், விவாகம், புது மனை குடிபுகல், போன்ற அனைத்து சுபகாரியங்களுக்கும் ,விதை நெல்தான் வைக்க வேண்டும். அரிசியை வைக்கக் கூடாது. நாம் செய்யும் சுப காரியங்கள் வளர்ந்தோங்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் விதை நெல்லை வைக்கிறார்கள். நெல் விதைத்தாலும் அரிசிதான் முளைக்கும். உமி தானாகவே அகன்றுவிடும். […]

தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது ?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! அது என்ன 12 வருஷங்கள்? தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது ? அண்ணன்- தம்பி, தந்தை- தனயன் எனும் உறவில் உள்ளவர்கள், 12 வருட காலம் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்தால், அவர்களது தொடர்பு தானாகவே காலாவதியாகிவிடும்; மீண்டும் அவர்களுக்கான தொடர்பை- உறவைப் புதுப்பிக்க, உரிய பரிகாரத்துடன் இணையவேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். முதியவரான தந்தை காணாமல் போய்விட்டார்; அவர் இருக்கும் இடம் உட்பட, எந்தவிதத் தகவலும் தெரியவில்லை. மகனும் முற்றிலும் மறந்த நிலையில் […]

யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! யஜ்ஞோபவீதம் எனப்படும் பூணூல் – சிறு குறிப்பு!!! உபநயனம் செய்யப்பெற்றவனுக்கு எப்போதும் இடது தோளில் தொங்கவேண்டிய ஒன்று பூணூல். துறவறம் ஏற்கும்போது மட்டுமே , அது தோளில் இருந்து விலகும். முற்றிலும் அறுந்துவிட்டால், உடனே மாற்ற வேண்டும். அழுக்கு ஏறியிருந்தாலும், மூன்றில் ஒரு நூல் அறுந்து போனாலும், எந்த நிமிடத்திலும் அறுந்து போகும் நிலையில் நைந்திருந்தாலும், பிறப்பு- இறப்பு போன்ற தீட்டுபட்ட வேளையிலும், பெண்மணிகள் மூன்று நாள் தீட்டைச் சந்திக்கும் வேளையிலும், தன்னைத் […]

சனீஸ்வர வழிபாடு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சனீஸ்வர வழிபாடு!!! அண்மையில் சனி மாற்றம் என்று பலரும் இல்லை இல்லை என்று இன்னொரு சாராரும் ஆலயங்களும் பலவாறு குழப்பத்தில் இருந்தார்கள் என்பதைக் கண்டோம்! ஒரு பஞ்சாங்கம் கடந்த வாரம் சனி மாற்றம் என்றும் இன்னொரு பஞ்சாங்கம் அடுத்த வருடம் என்று அறிவித்தார்கள்! தமிழ் நாட்டில் வெளிவரும் பஞ்சாங்கங்களும் பலவாறு கணித்து இருந்தார்கள்! நாம் அவைபற்றி அதிகம் குழம்ப வேண்டிய தேவை இல்லை! காலாகாலமாக நாம் எந்தப் பஞ்சாங்கத்தை பின் தொடர்கிறோமோ அது […]

புதுமனை புகும்போதும் , ஆலய விழாக்களிலும், கும்பாபிஷேக நேரங்களிலும் முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்? அறிந்து கொள்வோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! புதுமனை புகும்போதும் , ஆலய விழாக்களிலும், கும்பாபிஷேக நேரங்களிலும் முதலில் பசுமாட்டை உள்ளே அழைத்துச் செல்வது ஏன்? அறிந்து கொள்வோம்! பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம் (கவாமங்கே ஷ§திஷ்டத்தி புவனானி சதுர்தச). தேவதைகளும் பசுவில் வாசம் செய்கிறார்கள். பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம் (எததிவா அக்னேஸ்தேஜோயத்கிருதம் எதத்ஸோமஸ்ய யத்பய:) பஞ்சகவ்யம், (பால், தயிர், நெய், சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கும் உகந்தது, மருந்தாகவும் […]

”  நாந்தி  சோபனம் ” பற்றிய சிறு குறிப்பு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ”  நாந்தி  சோபனம் ” பற்றிய சிறு குறிப்பு!!! திருமணம், உபநயனம் போன்ற சுபநிகழ்ச்சியின் போது, மறைந்த முன்னோர்களில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காக நடத்தப்படுவது “நாந்தி சோபனம் .’. அதாவது தந்தை, தந்தையின் தந்தை, அவரின் தந்தை, இந்த மூவரின் மனைவிகள், தாய் வழியிலும் இதே வகையில் மூவரும், அவர்களின் மனைவிகளுமாக உள்ள முன்னோர்களை “சோபன பித்ருகள்’ என்று குறிப்பிடுவர். இவர்களின் ஆசியால் குடும்பத்தில் மங்களமும், சந்தோஷமும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். திருமணம், […]

கோயில்கள் பரவலாக நிகழும் திருவிளக்கு பூஜையில் சிறுவர், சிறுமிகளும்… ஏன் ஆண் பக்தர்களும்கூட அமர்ந்து பூஜிக்கிறார்கள். இதில் பிழை ஏதும் இல்லை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! கோயில்கள் பரவலாக நிகழும் திருவிளக்கு பூஜையில் சிறுவர், சிறுமிகளும்… ஏன் ஆண் பக்தர்களும்கூட அமர்ந்து பூஜிக்கிறார்கள். இதில் பிழை ஏதும் இல்லை!!! திருவிளக்குப் பூஜை என்பது பெண்களுக்கு மட்டுமே என்ற சிந்தனை சிலருக்கு உண்டு! ஆனால் அது அப்படி அல்ல! திருவிளக்கு பூஜை சம்பிரதாயத்தில் வந்தது. ஆண் – பெண் பேதமின்றி அத்தனைபேரும் வழிபடலாம். ‘பகவதி சேவை’ என்ற பெயரில், திருவிளக்கில் அம்பாளை பூஜிப்பார்கள் கேரளத்து மக்கள். அதில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்; […]

இறைவழிபாடு- சாஸ்திரம் வேதங்கள் என்ன சொல்கின்றன???

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறைவழிபாடு- சாஸ்திரம் வேதங்கள் என்ன சொல்கின்றன??? அவசர உலகம். வேலைப்பளு… சீக்கிரமாக எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும். உட்கார்ந்து சாப்பிடவும் நேரம் இல்லை. அதற்காக, சாதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தெருவில் நடந்து கொண்டே சாப்பிடலாமா? குளிக்க நேரம் இல்லை… குளியலைத் தவிர்க்கலாமா? கோயிலுக்குப் போக நேரம் இல்லை. ஸ்கூட்டரில், காரில், பஸ்சில் இருந்தபடியே சந்நிதியைப் பார்த்து தலையாட்டிவிட்டு செல்லலாமா???? கோயிலுக்கு செல்ல நேரம் இல்லை, ஆனால், சின்னத்திரை, கிரிக்கெட் பார்க்க நேரம் உண்டு. […]

ஷோடசோபசார பூஜை என்றால் என்ன? அதன் விரிவாக்கம் என்ன? அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஷோடசோபசார பூஜை என்றால் என்ன? அதன் விரிவாக்கம் என்ன? அறிவோம்!!! ஆலயங்கள் உட்பட பல வழிபாட்டு இடங்களில் பல பூஜை முறைகளைப் பார்க்கிறோம். அவற்றை அப்படியே வணங்கி விட்டு வராமல் என்னசெய்கிறார்கள்? எப்படி வழிபாடு இயற்றுகிறார்கள் என்பதையும் சற்று உள் வாங்குவோம் நண்பர்களே!!! ‘ஷோடசம்’ – என்றால் பதினாறு. உபசாரம் என்றால் பணிவிடை. பணிவிடையின் அட்டவணையில் 16 இனங்கள் உண்டு. பணிவிடை பலவாறாக இருந்தாலும், 16 உபசாரங்களில் முழுமையான பணிவிடையை முடித்துத் தந்திருக்கிறார்கள் […]

அட்சதை……….. பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து செல்லும் வாகனம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! அட்சதை……….. பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து செல்லும் வாகனம்! நம் மக்களின் எல்லாச் சடங்குகளிலும் ‘அட்சதை’ எனும் மங்கலப் பொருள் கட்டாயம் இருக்கும். எல்லா வாழ்த்துகளிலும் இதைத் தூவி வாழ்த்துவதைப் பார்த்திருப்போம். தூவி வாழ்த்துவதில் மலர்களைவிட மேலானது இது. அட்சதை இல்லாதபோதே மலர்களும் புனித தீர்த்தமும் உபயோகிக்கலாம் என்பது ஐதீகம். வடமொழியில் ‘க்ஷதம்’ என்றால் இடிப்பது என்று பொருள். ‘அக்ஷதம்’ என்றால் இடிக்கப்படாதது அல்லது குத்தப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத அரிசியை ‘அட்சதை’ […]

Scroll to top