தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
உதக சாந்தி என்றால் என்ன? அதை என் செய்கிறோம்?
நலமும் வளமும் தரும் ஒரு ஒரு உத்தம சடங்குதான் உதக சாந்தி!!!
பல இல்லங்களில் அவர்களது குழந்தைகளுக்கு பிரஹ்மோபதேச வைபவம் நடத்த யோசித்து வரலாம். உபநயனத்தின் ஒரு அங்கமாக உதக சாந்தியும் உண்டு என நமக்கு தெரிந்திருக்கும்.
இந்த உதகசாந்தி கர்மாவானது உபநயனம், சீமந்தம், ஆகிய விசேஷங்களுக்கு அங்கமாக, பூர்வாங்கமாக, செய்யப்படும்.
மிகவும் உசத்தியான கர்மாவாகும். பலர் இன்று விவாஹத்திற்கு அங்கமாகவும் செய்வர்.
சீமந்தம் , விவாகத்தின் போதும் தம்பதிகளுக்கு நலமும் வளமும் கிடைக்க வேண்டும் , ஆயுள் விருத்தி உண்டாக்க வேண்டும் என்ற பிரார்த்தனைதான் இந்த ஜபத்தின் முக்கிய அம்சமாகிறது!!!
அந்த உதகசாந்தியை பற்றி ஒரு வார்த்தை அறிவோம்:-
இந்த பிரயோகம் போதாயன மகரிஷியினால் சொல்லப் பட்டதாகும்.
உபநயன கர்மாவிற்கு அங்கமாக செய்வதானால் கர்மாவுக்கு முந்தினம் சாயங்காலத்திலும் இதை செய்யலாம்.
சாயங்காலத்தில் செய்வதானாலும் ஸ்நான, தூய்மையான வஸ்த்ரங்கள் அவசியம்.
பூணுல் போட்டுகொள்ளும் பையனை க்ருஹங்கள் கஷ்டங்கள் ஏதும் படுத்தாமல் இருப்பதற்காகவும், க்ருஹங்களின் தோஷம் ஏதவது இருந்தால் அவைகள் நீங்குவதற்காவும், பையனுக்கு புத்தி கூர்மை, தேஜஸ், ஆயுரார்பிவ்ருத்தி, வேத அத்யாயனம் செய்ய பூர்ண யோக்யதை ஏற்படுவதற்காகவும், எல்லோரும் சுபிக்ஷமாக இருப்பதற்காகவும், இந்த கர்மா செய்யப்படுகின்றது. இதனால் பல பாவங்களும் தொலைகின்றது. லோக க்ஷேமார்த்தமும் இதில் பிரார்த்தனை உண்டு.
இதில் ஜபிக்கவேண்டிய மந்திரங்கள் ஒன்று இரண்டு அல்ல; யஜுர்வேத ஸம்ஹிதை மற்றும் தைத்ரீய ப்ராஹ்மண பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 40க்கு மேற்பட்ட விசேஷ மந்திரங்களும் சூத்ரங்களும் இந்த ஜபத்தில் அடங்கும்.
இதனால் பல பாவங்களும் கஷ்டங்களும் தொலைகின்றது. உலக நன்மைகளுக்கும் இதில் பிரார்த்தனை உண்டு.
இதில் ஜபிக்கவேண்டிய மந்திரங்கள் ஒன்று இரண்டு அல்ல; யஜுர்வேத ஸம்ஹிதை மற்றும் தைத்ரீய ப்ராஹ்மண பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 40க்கு மேற்பட்ட விசேஷ மந்திரங்களும் சூத்ரங்களும் இந்த ஜபத்தில் அடங்கும்.
உதகம் என்றால் தண்ணீர். நுட்பமான வேத மந்திரங்களால் நுண்ணிய அதிர்வலைகளை தண்ணீரில் ஏற்றி அந்தத் தண்ணீரால் அபிஷேகம் செய்வதற்கு உதகசாந்தி என்று பெயர்.
ஒரு கலசத்தில் (குடத்தில்) வருணனை பூஜை செய்து, கலசத்தின் அருகில் வேதம் கற்ற பிராமணர்களை அமரச் செய்து அவர்களை சிற்சில முக்கியமான வேத மந்திரங்களை (சுமார் 40 நிமிடம்) ஜபம் செய்யச் சொல்லி, அந்த கலச ஜலத்தை (உபநயனம் செய்யும் பையனுக்கு) அபிஷேகம் செய்து வைப்பது உதகசாந்தி எனப்படுகிறது.
ஜபம் நடக்கும் சமயத்தில் நாமும் மற்ற லெளகீக கார்யங்களில் ஈடுப்படாமல் ச்ரத்தையுடன் மந்திரங்களை செவிமடுப்பது நல்லது.
நல்லதை செய்வோம் நலமும் வளமும் பெறுவோம்!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
<img class="x16dsc37" role="presentation" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
<img class="x16dsc37" role="presentation" src="data:;base64, ” width=”18″ height=”18″ />

உதக சாந்தி என்றால் என்ன? அதை என் செய்கிறோம்?