சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!
ஆலய உத்சவங்கள், விவாகம், புது மனை குடிபுகல், போன்ற அனைத்து சுபகாரியங்களுக்கும் ,விதை நெல்தான் வைக்க வேண்டும். அரிசியை வைக்கக் கூடாது. நாம் செய்யும் சுப காரியங்கள் வளர்ந்தோங்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் விதை நெல்லை வைக்கிறார்கள். நெல் விதைத்தாலும் அரிசிதான் முளைக்கும். உமி தானாகவே அகன்றுவிடும். அரிசிதானே முளைக்கிறது, உமி அல்லவே என்று நினைத்து, நெல்லுக்குப் பதிலாக அரிசியை விதைக்க முடியுமா? அது முளைக்காது! முளை விட்டு வெளிவர நெல் (உமி) வேண்டும்.
சுப காரியங்கள், விவாகம் என்றால் தம்பதிகளின் வாழ்க்கை, பிதியா வீடு என்றால் அங்கு வசிப்பவர்களின் வாழ்வு முளை விட்டு படிப்படியாக வளர்ந்து செழிப்போடு விளங்க வேண்டும் என்ற எண்ணத்தினால் விதைநெல்தான் வேண்டும். சுப காரியங்களுக்கு, பாலிகையில் விதையைப் பாவிப்பதும் வளர்ப்பது உண்டு.
உற்ஸவ காலங்களில், ஆரம்ப வேளையில் பாலிகைகளில் விதைத்த விதைகள், நாள் தாண்டத் தாண்ட முளையிட்டு வளர்ந்து பயிர்க்கற்றைகளாகக் காட்சியளிக்கும். உற்ஸவ நிறைவு நாளில், அவற்றை மேளதாளத்தோடு அவற்றை தூய பொருளாக பயன் படுத்தப்படும்!! அனைத்து சுவாமிகளுக்கும் சாத்தப்படும்!!
உற்ஸவம் வளர்ந்தோங்கி செழிப்புற்று நடந்ததாக மனநிறைவு இருக்கும். இறைவனின் அனுக்கிரகமும் கிடைக்கும் நண்பர்களே!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
No photo description available.
சுப காரியங்களின்போது, நாழி நிறைய விதை நெல் வைத்திருப்பார்கள். விதை நெல்லுக்குப் பதிலாக அரிசி நிரப்பி வைக்கலாமா? இதற்கான தாத்பரியம் என்ன? அறிவோம்! தெரிவோம்!!!
Scroll to top