கட்டுரை

புதிய உடுப்புகள் முதலானவற்றில் மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்?

October 29 at 1:55 PM  ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்? எந்த ஒரு புதுப் பொருளை நாம் அணிந்தாலும், அல்லது திருமண அழைப்பிதழ் , உபநயன அழைப்பிதழ் வேறு எந்த விதமான மங்கலகரமான அழைப்பிதழ்கள் என்றாலும் மஞ்சள், குங்குமம் தொட்டு வைக்கிறோம்! ஏன் ? அது மங்களகரமாக, நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. மஞ்சள்- குங்குமமும் சந்தனமும் மங்கல திரவியங்கள். அவற்றால், மங்கலங்கள் சம்பந்தப்பட்ட […]

மாங்கல்யம், தாம்பூலத்தின் ( வெற்றிலை) சிறப்பு பற்றி அறிவோம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மாங்கல்யம், தாம்பூலத்தின் ( வெற்றிலை) சிறப்பு பற்றி அறிவோம்!!! வாக்குறுதிக்கு சாட்சி தாம்பூலம். அதை சம்ஸ்காரமாக மாற்றி, மங்களகரமான திருமண ஆரம்பத்தை மங்களப் பொருளான தாம்பூலத்தின் மூலம் ஆரம்பிக்கவேண்டும் என்பது தர்ம சாஸ்திரத்தின் வழிகாட்டல். தாம்பூலம் ( வெற்றிலை) என்பது நமது பண்பாட்டின் அடையாளம். திருமணத்தை உறுதிசெய்ய நிச்சயத் தாம்பூலம். திருமணத்தை நிறைவு செய்ய முகூர்த்த தாம்பூலம். விருந்தினரின் வாய் மணக்க புக்தத் தாம்பூலம். தெய்வ வழிபாட்டில் உபசரிக்க தர்ப்பூரத் தாம்பூலம். மக்கள் […]

தாலியில் ஏன் குங்குமம் அணியப்படுகிறது?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! தாலியில் ஏன் குங்குமம் அணியப்படுகிறது? சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் என்ன சொல்கின்றன? திருமணத்தின் போது குருக்கள் ஐயா சொல்கிறார் நாம் அப்படி செய்கிறோம் என்பதை தாண்டி அதில் உள்ள தத்துவங்களை நன்மைகளை விஷயங்களை தெரிவோம் நண்பர்களே!!! மஞ்சளில் தயாரிக்கப்படுவது குங்குமம். மஞ்சள் மங்கலப் பொருட்களில் ஒன்று. அதற்கு மருத்துவ குணமும் உண்டு. தங்கமும் மங்கலகரமான பொருளே! இவை இரண்டையும் தரிப்பது, நித்ய மங்கலத்தை அளிக்கும். மங்கை, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றும் மங்கலத்தை அளிப்பவை. […]

திருமணமும் அதன் தத்துவமும்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! திருமணமும் அதன் தத்துவமும்!!! பொருத்தம் பார்ப்பது என்று நாம் குறிப்பிடுவது ஜோதிடத்தில் ஆனுகூல்யம் எனப்படுகிறது. அதை, ஆங்கிலத்தில் ‘சப்போர்ட்’ என்பார்கள். இந்த சப்போர்ட்டே எல்லாவற்றையும் சாதித்துக் கொடுத்துவிடாது. ஒருவனுக்கு முழுத் தகுதி இருந்தால் மட்டுமே சிபாரிசுக் கடிதத்தின் மூலம் வேலை கிடைக்கும். மற்றபடி, சிபாரிசுக் கடிதமே தகுதியைக் கொடுத்துவிடாது. எனவே, உங்களிடம் இருக்கவேண்டிய தகுதிகள் இருக்கின்றனவா என்று, ஜோதிடர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதற்கு சப்போர்ட்தான் இந்தப் பொருத்தங்கள். தாய்-தந்தை வேறு, பழக்க […]

சிராத்தம் செய்யும் இடம்!

  ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிராத்தம் செய்யும் இடம்! எது எது எங்கே எப்படி எப்ப செய்யப்பட வேண்டும் என்று சாஸ்திரங்களும் ஆகம விதிகளும் மிகத் தெளிவாக சொல்லி வைத்திருக்கின்றன !!! நாம் நினைத்தவாறு செய்து விடமுடியாது! யாரும் தவறாக செய்தால் அது உதாரணமும் இல்லை! அவர் அப்படி செய்தார் இவர் இப்படி செய்தார் ஆகவே நானும் அப்படி செய்கிறேன் என்ற வாதங்கள் ஏற்புடையதல்ல !!! நாங்க செய்வதை சரியாக செய்வோம் நண்பர்களே!!! ‘இறை உருவ வழிபாடு, […]

முன்னோர் வழிபாடு!!!

September 28  ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! முன்னோர் வழிபாடு!!! ‘தாயை வழிபடு’, ‘தந்தையை வழிபடு’ என்று கூறி, முன்னோர் ஆராதனைக்கு முன்னுரிமை அளிக்கிறது வேதம் (மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோபவ). ஆமாம்! முன்னோர் ஆராதனையை அறமாகச் சொல்கிறது வேதம். மனிதன் பிறக்கும்போது மூன்று கடன்களுடன் (கடமைகள்) பிறக்கிறான் கல்வியை ஏற்று நிறைவு செய்தால் ரிஷிகள் கடன் அடைந்துவிடும். வேள்வியில் இணைந்தால் தேவர்கள் மகிழ்வார்கள். குழந்தைச் செல்வத்தை ஈன்றெடுத்தால் பித்ருக்கள் (இறந்த முன்னோர்) கடன் தீர்ந்துவிடும் என்கிறது […]

இஷ்ட தெய்வ குல தெய்வ வழிபாடு!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இஷ்ட தெய்வ குல தெய்வ வழிபாடு!!! பலவிதமான வழிபாடுகளை இயற்றுவோம். இஷ்ட தெய்வ குல தெய்வங்களை வேண்டி வணங்கி நல்ல விடயங்களை ஆரம்பிப்போம். அந்த வழிபாடுகள் பற்றிய ஒரு குறிப்பை பார்ப்போம்! இஷ்டம் இருந்தாலும் இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செய்வது என்று ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அனுசரணையாகவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள […]

சாஸ்தா தரிசனம்! – அபூர்வத் தகவல்கள்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பகுதி 1. சாஸ்தா தரிசனம்! – அபூர்வத் தகவல்கள்! அறியாதவர்கள் அறிந்து கொள்ள இந்த தகவல்கள் உதவும்!!! சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ – தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம். * மகா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார். […]

சாஸ்திரங்களும் விதிமுறைகளும் அறிவோம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சாஸ்திரங்களும் விதிமுறைகளும் அறிவோம்! நீங்கள் நினைத்தவாறு சாஸ்திர விதிமுறைகளைத் தங்களது விருப்பப்படி யாரும் தளர்த்த இயலாது. எந்த நேரத்தில் விதிகளை – கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்று சாஸ்திரம் சொல்லும். அதை மட்டும் தாங்கள் ஏற்கலாம். தொலை நோக்குடன், மனித இனத்தின் உயர்வை மையமாக வைத்து வகுக்கப் பட்ட சட்ட திட்டத்தின் வடிவமே சாஸ்திரம். நம் போன்றவர்கள் அதில் கை வைக்க வேண்டும் எனில், அதன் குறிக்கோளை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். முக்காலமும் அறிந்த […]

பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் அப்படியென்ன தொடர்பு?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் அப்படியென்ன தொடர்பு? `பார்வதிதேவி, நீராடும் வேளையில் தனது பாதுகாப்புக்காக ஒரு புதல்வனைத் தோற்றுவித் தாள். அவரே நாம் வணங்கும் பிள்ளையார்’ என்கிறது சிவபுராணம். எனவே, அவர் நீர் நிலைகளின் கரையில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. ‘முதல் படைப்பு நீர்!’ என்கிறது வேதம். பரம்பொருளில் முதல் தோற்றம் பிள்ளையார். முதலும் முதல்வனும் அருகருகே இருப்பது சிறப்பு தானே. சைதன்யமும் ஜடப்பொருளும் சேரும்போது… அதாவது, சிவனும் பார்வதியும் சேரும்போது புதுப் பொருள் ஒன்று தோன்றும். […]

Scroll to top