தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஐப்பசி மாதம் வர உள்ளது. இந்த நேரத்தில் ஐப்பசி மாத சிறப்புகள் சிலவற்றை பார்ப்போம்.
ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு.
காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கிய விரதமான கந்த சஷ்டி திருவிழாவும் இம்மாதத்தில் நிகழ்கிறது.
இம்மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிசேகம் நடைபெறுகிறது.
கேதார கௌரி விரதம், முருகன் சுக்ரவார விரதம், தனத்திரயோதசி, யமதுவிதியை, கோவத்ச துவாதசி, பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி போன்ற நிகழ்வுகளும் ஐப்பசியில் நிகழ்கின்றன.
![Image may contain: fireworks, night, sky and outdoor](https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/43379746_1759190254178238_3104722989447380992_o.jpg?_nc_cat=105&_nc_oc=AQlJ98kCT9L0B9zpve35YJlA32pRQlzY7nGsGLJFv-lO5q0MtxZwUkw1FvMkhOalj6I&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=8b7f5f45de42c0e158fdd72e34fe0fe8&oe=5E0E056D)