எப்படி அர்ச்சனை செய்கிறோம்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஏதேனும் ஒரு கோரிக்கையை வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள் தங்களது கோத்திரம், நட்சத்திரம், ராசி மற்றும் பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்வர். அதாவது, தங்களுக்குத் தேவையானவற்றை பெற வேண்டி பெயர், விலாசம் எழுதி அரசாங்கத்திடம் மனு எழுதி சமர்ப்பிக்கிறோம் அல்லவா, அது போல அர்ச்சகர் மூலமாக இறைவனிடம் தனக்குத் தேவையானவற்றைப் பெற வேண்டி அர்ச்சனை செய்வதன் மூலமாக மனுவினை சமர்ப்பணம் செய்வர்.
எனக்கு என்ன தேவையோ அதனை இறைவன் அறிவான், நான் தனியாக அவனிடம் மனு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுபவர்கள் ஸ்வாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதேபோல, எனக்குத் தேவையானவற்றை இறைவன் தாராளமாக எனக்குத் தந்திருக்கிறான், அதுவே எனக்குப் போதுமானது என்று நினைப்பவர்களும் தங்கள் பெயருக்கு என்று தனியாக அர்ச்சனை செய்து கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு தனக்கு எதுவும் தேவையில்லை, இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் (லோகா: ஸமஸ்தாஸ் சுகினோ பவந்து!) என்று எண்ணுபவர்கள் லோக க்ஷேமத்திற்கு என்ற சங்கல்பம் செய்துகொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கால பூஜையின்போதும் அந்தந்த தெய்வங்களின் பெயர்களுக்கு அர்ச்சனை என்பதை அர்ச்சகர் செய்துகொண்டுதான் இருப்பார். சாமானிய மனிதர்கள் ஆகிய நாம் நமது பெயருக்கு அர்ச்சனை செய்துகொள்வதே சரியானது.
எப்படி அர்ச்சனை செய்கிறோம்?
Scroll to top