குருவின் திருவருள் பெற ………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர், குரு பகவான். ஆம்! வாழ்க்கையின் திசையையே தடம் புரளச் செய்யும் ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கட்டுப்படுத்த, ஸத்வ குணம் அவசியம். அதனைத் தந்து அருள்பவர், குரு.

மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந்தால், பாப கிரகத்தின் தன்மை சுப கிரகங்களுக்கும் வந்துவிடும். ஆனால், குருவோடு சேர்ந்த பாப கிரகங்கள், தனது இயல்பை மாற்றி, குருவின் இயல்பை ஏற்றுக்கொண்டு விடும்.

இப்படியொரு பெருமை, குருவுக்கு மட்டுமே உண்டு. இந்தப் பெருமை, பரம்பொருளான – உலக குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடமிருந்து கை மாறியது. அறிவுக்கு ஈசனை நாடு என்கிறது சாஸ்திரம் (ஞானம் மஹேச்வராதி ச்சேத்). அதுபோல, உலக குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அறிவுத் திறன், நவகிரக குருவுக்குள் ஊடுருவியது.

ஆக, ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவானை,வியாழ பகவானை, வழிபடுவதன் மூலமும் குருவின் திருவருளை பரிபூரணமாகப் பெறலாம்.

No photo description available.
குருவின் திருவருள் பெற ………..
Scroll to top