தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
கார்த்திகைத் தீபம் அண்மிக்கிறது.
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.
திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் மாவிளக்கு போட்டும் வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டுதென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து “சொக்கப்பானை”க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார்.
இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
![Image may contain: 1 person](https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/46482498_1814591365304793_5305988441266192384_n.jpg?_nc_cat=102&_nc_oc=AQlNSDbngoBTHMkpZ0oC-2heBUYSsxHbOuifIBlgT7kZm2upYZmBhbVA2jcWfiBfFew&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=58ca1efd429ef390826a8850f76767e7&oe=5E03C356)