தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆலயங்களில் தீர்த்தம் தருகிறார்கள். அது ஒரு புண்ணிய நீர், அதை நிலத்தில் சிந்தாமல் பருக வேண்டும் கவனமாக.
கையை விரித்தபடி தீர்த்தம் வாங்கும் போது அரைவாசிக்கு மேலே கீழே கொட்டிவிடும்.
தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்தால், உள்ளங்கை குவிந்து விடும். அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ளலாம்! சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள்; கீழே சிந்தாது!
நல்ல விடயங்களை அறிந்து அதன் படி ஒழுகுவோம். நிச்சயம் இறைவன் அருள் பாலிப்பான்.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
Comments by Dr. N. Somash Kurukkal