தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-
ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்:
நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்கள் அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம்.அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
சமித்து என்பது ஹோம குண்டத்தில் சேர்க்கப் படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிகளுக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உண்டு. வில்வம் சிவனுக்கும் மகாலட்சுமிக்கும் பிடித்தமானவை.துளசி சமித்து நாராயணனுக்கும்,அத்தி சமித்து சுக்கிரனுக்கும்,நாயுருவி சமித்து புதனுக்கும்,பலாமர சமித்து சந்திரனுக்கும்,அரச மர சமித்து குருவிற்கும்,வன்னி மர சமித்து சனீஸ்வரனுக்கும்,,அருகம்புல் விநாயகருக்கும்,ராகுவுக்கும்,
,மாமர சமித்து -சர்வ மங்களங்களையும் சித்திக்கும்.
Comments by Dr. N. Somash Kurukkal