தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பல ஆலயங்களுக்கு செய்கிறோம், பல வழிபாடுகளை இயற்றுகிறோம். ஆனால் எங்கள் வாழ்வில் குல தெய்வ வழிபாடு என்பது மிகப் பிரதானமாகிறது.
குலதெய்வத்தை வழிபடுவதில் தடங்கல் எதுவும் இருக்கக் கூடாது என்று சொல்லிவைத்திருக்கிறார்கள் எமது முன்னோர்கள்!
இஷ்ட தெய்வத்துக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை விட குலதெய்வத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று ஞானிகளும் அறிஞர்களும் விவரித்திருக்கிறார்கள்.
குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் என்றும் முன்னோர்களில் ஒருவரே தெய்வமாகியிருக்கிறார்கள் என்றும் நம்பிக்கை உண்டு. எனவே, அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தைச் சேர்ந்தவர்களை கண்ணும்கருத்துமாக பேணிக் காப்பார்கள் என்பது ஐதீகம். எனவேதான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. வணங்கப்படுகின்றன.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம் என்று
prepared by: panchadcharan swaminathasarma
Comments by Dr. N. Somash Kurukkal