நினைவஞ்சலி

அஞ்சலி-யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்ட இரத்தினசபாபதிக்குருக்கள் சந்தானகோபால சர்மா

கண்ணீர் அஞ்சலி யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்ட இரத்தினசபாபதிக்குருக்கள் சந்தானகோபால சர்மா இன்று 16-12-2021 வியாழக்கிழமை காலை அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். முன்னாள் புகையிரதநிலைய உத்தியோகத்தரும், காட்டுத்துறை பிள்ளையார் ஆலய குருவாக பல வருடங்களாக சேவையாற்றியவர். காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்பு துணைவரும், கிரிஜாம்பிகை ( France), காலஞ்சென்ற ஜம்புகேஸ்வரன், குமாரசாமிசர்மா, பகவதீஸ்வர சர்மா (France) ஆகியோரின் அன்பு சகோதர ரும் ஆவார்.அன்னாரது ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவனை வேண்டுகின்றோம். அமரரின் குடும்ப […]

அஞ்சலி -கண்ணீர் அஞ்சலி : சுன்னாகம் மயிலணி ஸ்ரீமதி ஜெகதாம்பிகை குகதாஸசர்மா அவர்கள் .

கண்ணீர் அஞ்சலி : சுன்னாகம் மயிலணி ஸ்ரீமதி ஜெகதாம்பிகை குகதாஸசர்மா அவர்கள் இறைவனடி சேர்ந்த தகவல் அறிந்தோம் . அன்னாரின் ஆன்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீகதிரமலைச் சிவன் பாதம்பணிந்து அமரரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி MHC தலைமையகம் சுன்னாகம் .

கண்ணீர் அஞ்சலி: ஓய்வு நிலை வைத்தியர் பிரம்மஸ்ரீ இராசையாக்குருக்கள் கணேசமூர்த்தி சர்மா அவர்கள்

கண்ணீர் அஞ்சலி: ஓய்வு நிலை வைத்தியர் பிரம்மஸ்ரீ இராசையாக்குருக்கள் கணேசமூர்த்தி சர்மா அவர்கள் மட்டக்களப்பு ,காரைதீவில் சிவபதம் அடைந்தார். அமரரின் குடும்பதினருக்கு இரங்கல் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். அமரர் கணேசமூர்த்தி சர்மா அவர்கள் கனடா Scarborough மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு, சிவஸ்ரீ லிங்க. சுரேஷ் குருக்களின் பாரியார் ஸ்ரீமதி ஷோபனா சுரேஷ் குருக்களின் தந்தையாவார். அனுதாபம் தெரிவிக்க : 416 […]

அஞ்ஜலிபிரம்மஶ்ரீ சுந்தர ஐயர் பாலசுப்பிரமணிய ஐயர் ,

விழிநீர் அஞ்ஜலிபிரம்மஶ்ரீ சுந்தர ஐயர் பாலசுப்பிரமணிய ஐயர் , (அப்பையா கடை பாலன் ஐயா) இன்று 20.1.22, வியாழன் மாலை சுவீடனில் சிவசாயுஜ்யம் அடைந்தார் . அன்னார் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தர ஐயர் அன்னபூரணி அம்மா அவர்களி ன் புதல்வரும் ,காலம் சென்ற இராமச்சந்திர ஐயா (புடவை கடை சந்திரன் ) அவர்களினது பாசமிகு சகோதர ரும், லோகநாயகி அம்மாவினது துணைவரும் . பிரம்மஶ்ரீ சுந்தர ராஜ சர்மா (ஓல்டன் மனோன்மணி அம்பாள் ஆலயம்) ரவீந்திர சர்மா(சுவீடன் […]

கல்வளை நியூசிலாந்து வி. விவேகானந்த சர்மா – அஞ்சலி.

கண்ணீர் அஞ்சலி கல்வளை/நியூஸீலந்து,ஓய்வு நிலை”வங்கிமுகாமலயாளர்” விஸ்வ விவேகானந்த சர்மா (சச்சி அண்ணா) அவர்கள் சற்று முன்னர் இறைபதம் எய்திய துயரத்தகவலை அறிந்தோம். இவர் பெருமாக்கடவை, சரோஜா அம்மாவின் (சரஸ்வதி) அன்புக்கணவரும், மஜூரதனின் அருமைத் தந்தையுமாவார். அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கைளைத் தெரிவிக்கிறோம் . அனுதாபம் தெரிவிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள : 64220767213 and 642102694796. ஓம் சாந்தி MHC […]

Scroll to top