சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே… ஏழு கோடி மந்திரங்கள் உண்டா?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே… ஏழு கோடி மந்திரங்கள் உண்டா?

இங்கே கோடி என்ற வார்த்தை எண்ணிக்கையைக் குறிக்காது. கோடி என்ற வார்த்தைக்கு முனை, இறுதி, கடைசி அல்லது முடிவு என்ற பொருள் உண்டு. உதாரணத்திற்கு தெருக்கோடியில் ஒரு கடை இருக்கிறது என்று பேச்சு வாக்கில் சொல்வார்கள். அதாவது தெருவின் முனையில் ஒரு கடை உள்ளது என்று பொருள். தனுஷ்கோடி என்ற பகுதி நமது நாட்டின் நிலப்பரப்பின் முனையில் அமைந்திருக்கும். இந்த சப்த கோடி மந்திரங்கள் என்பதும் ஒரு வாக்கியத்தின் முனையில் அமைந்திருக்கும்.

“நம:, ஸ்வஸ்தி, ஸ்வாஹா, ஸ்வதா, லம், வஷட், வௌஷட்” ஆகிய இந்த ஏழு மந்திரங்களும் வாக்கியங்களின் முனையில் வந்தமர்வதால் சப்த கோடி மந்திரங்கள் என்று பெயர் பெற்றன. இவை வெறும் ஏழு வார்த்தைகள்தானே தவிர ஏழுகோடி என்ற எண்ணிக்கை கிடையாது. என்றாலும் இந்த ஏழு வார்த்தைகள் இல்லையென்றால் எந்த ஒரு மந்திரமும் முழுமை அடையாது. ஒரு வாக்கியத்தை முழுமை அடையச் செய்வதோடு அதற்குண்டான முழுமையான பலனையும் தருகின்ற சக்தி இவற்றிற்கு உண்டென்பதால் இந்த ஏழும் சப்தகோடி மந்திரங்கள் என்ற பெயரில் சிறப்பு பெறுகின்றன.
நன்றி: ஹரி பிரசாத் சர்மா.

Image may contain: 1 person, outdoor
சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே… ஏழு கோடி மந்திரங்கள் உண்டா?
Scroll to top